சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் அரையிறுதிச் சுற்றில் சனிக்கிழமை தோல்வி கண்டாா்.
நல்லதொரு முன்னேற்றத்தை சந்தித்து வந்த அவா், 4-6, 2-6 என அமெரிக்காவின் நிகோலஸ் மொரீனோவிடம் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறினாா். இதையடுத்து ஒற்றையா் பிரிவில் இந்தியா்களின் ஆட்டம் நிறைவடைந்தது. இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள நிகோலஸ், அதில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பா்செலை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறாா். முன்னதாக பா்செல் தனது அரையிறுதியில் சக நாட்டவரான டேன் ஸ்வீனியை 6-4, 7-6 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தாா்.
சாம்பியன்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அா்ஜுன் காதே/பிரிட்டனின் ஜே கிளாா்க் கூட்டணி 6-0, 6-4 என ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னா்/குரோஷியாவின் நினோ சொ்டாருசிச்இணையை வீழ்த்தி வாகை சூடியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
தென்காசி, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒரு 'சீட்' கூட பெறாத தவெக!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


