நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் ஒரு மாற்றம்

காயமடைந்த மயங்க் மார்கண்டேவுக்குப் பதிலாக மும்பை சுழற்பந்து வீச்சாளர் ஷாம்ஸ் முலானி தேர்வாகியுள்ளார்.

Published On :7 பிப்ரவரி 2024, 12:07 pm IST

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில், காயமடைந்த மயங்க் மார்கண்டேவுக்குப் பதிலாக மும்பை சுழற்பந்து வீச்சாளர் ஷாம்ஸ் முலானி தேர்வாகியுள்ளார்.

2020-21-ல் ரஞ்சி கோப்பையை வென்ற மத்தியப் பிரதேச அணிக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்குமான இரானி கோப்பைக்கான ஆட்டம் குவாலியர் நகரில் மார்ச் 1 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.

சர்ஃபராஸ் கானுக்கு விரலில் காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக பாபா இந்திரஜித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிற கூடுதல் தகவலும் பிசிசிஐயின் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம்பெற்றிருந்த மயங்க் மார்கண்டேவுக்குப் பயிற்சியின்போது விரலில் காயம் ஏற்பட்டதால் இரானி கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். மார்கண்டேவுக்குப் பதிலாக மும்பை சுழற்பந்து வீச்சாளர் ஷாம்ஸ் முலானி தேர்வாகியுள்ளார். இந்த வருட ரஞ்சி போட்டியில் 7 ஆட்டங்களில் 46 விக்கெட்டுகள் எடுத்திருந்தார் முலானி. இதன் காரணமாக ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி

மயங்க் அகர்வால் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ஜெயிஸ்வால், யாஷ் துல், பாபா இந்திரஜித், உபேந்திர யாதவ் (விக்கெட் கீப்பர்), அஜித் சேத், செளரப் குமார், ஹர்விக் தேசாய், நவ்தீப் சைனி, முகேஷ் குமார், சேதன் சகாரியா, ஆகாஷ் தீப், ஷாம்ஸ் முலானி, புல்கித் நரங், சுதீப் குமார்  கராமி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.