தனது 500-வது சர்வதேசப் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார் விராட் கோலி.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 20) தொடங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டி இந்திய அணியின் வீரர் விராட் கோலி விளையாடும் 500-வது சர்வதேசப் போட்டியாகும்.
விராட் கோலியின் 500-வது சர்வதேசப் போட்டி என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதமடித்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 206 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இது விராட் கோலியின் 29-வது சதமாகும்.
சர்வதேச கிரிக்கெட்டில் இது அவருடைய 76-வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










