தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

இந்திய ஒருநாள் தொடர்: பிரபல ஆஸி. பந்துவீச்சாளர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பிரபல வீரர் ஜை ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.

News image

இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் (கோப்புப் படம்)

Updated On :7 பிப்ரவரி 2024, 12:10 pm IST

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பிரபல வீரர் ஜை ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. ஆமதாபாத்தில் நடைபெறும் 4-வது மற்றும் கடைசி டெஸ்டுக்குப் பிறகு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 17 அன்று தொடங்குகிறது. கடைசி ஒருநாள் ஆட்டம் மார்ச் 22 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன், காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பிபிஎல் போட்டியில் விளையாடியபோது ஜை ரிச்சர்ட்சனுக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வந்ததால் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். எனினும் காயத்தினால் உண்டான பாதிப்பு மீண்டும் ஏற்பட்டிருப்பதால் தற்போது ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டியில் ஜை ரிச்சர்ட்சனால் விளையாடுவது சந்தேகம் என அறியப்படுகிறது. ஐபிஎல் ஏலத்தில் ஜை ரிச்சர்ட்சனை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை அணி. 

இதையடுத்து ஜை ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ஆஸி. ஒருநாள் அணியில் நாதன் எல்லீஸ் தேர்வாகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.