படம்: எக்ஸ் | ஐசிசி
படம்: எக்ஸ் | ஐசிசி

உலகக் கோப்பை 4வது போட்டி: இலங்கை டாஸ் வென்று பௌலிங் தேர்வு! 

உலகக் கோப்பையின் 4வது போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது. 
Published on

உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி. 2வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி. இந்நிலையில் உலகக் கோப்பையின் 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

தற்போது உலகக் கோப்பையின் 4வது போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது. 

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா 1.4வது ஓவரில் மதுஷனகா பந்து வீச்சீல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். தற்போது டி காக் 11 ரன்களுடனும் வான்டர் டுஸென் 8 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகிறார்கள். 

தென்னாப்பிரிக்க அணி 3 ஓவர் முடிவில் 27/1 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com