மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பிளேயிங் லெவனில் இல்லையெனில் குறைவாக உணரக் கூடாது: முகமது ஷமி

பிளேயிங் லெவனில் இல்லை என்பதற்காக குறைவாக உணரக் கூடாது என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :23 செப்டம்பர் 2023, 4:28 pm IST

பிளேயிங் லெவனில் இல்லை என்பதற்காக குறைவாக உணரக் கூடாது என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று (செப்டம்பர் 22) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரது இந்த சிறந்த பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணியை 276 ரன்களுக்குள் கட்டுப்படுத்த உதவியாக இருந்தது.

இந்த நிலையில், பிளேயிங் லெவனில் இல்லை என்பதற்காக குறைவாக உணரக் கூடாது என முகமது ஷமி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நீங்கள் பிளேயிங் லெவனில் இல்லை என்பதற்காக குறைவாக உணரக் கூடாது. ஏனென்றால், அணி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. இது அணியினுடைய திட்டம். அந்த திட்டத்துக்கு ஏற்றவாறு நாம் செயல்படுவது மிகவும் முக்கியம். எப்போதும் ஒருவரால் பிளேயிங் லெவனில் இருந்துகொண்டே இருக்க முடியாது. அணியில் இடம்பெறுவது என்பது ஆட்டத்தின் தேவையை பொறுத்தே அமையும். நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள் இருந்தும் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லையென்றால், அணியில் விளையாடுபவர்களுக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். நான் குறைவாக உணர அர்த்தமே இல்லை. அணியின் தேவைக்கேற்ப விளையாட நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.