இந்தியா-இலங்கை மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி பிரேமதசா மைதானத்தில் நடைபெற்றது. 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.
26.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 110 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.
இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் மிக மோசமான கீப்பிங் செய்துள்ளார் என இணையவாசிகள் விமர்சித்து வருகிறார்கள்.
பேட்டிங்கிலும் சொதப்பல், கீப்பிங்கிலும் சொதப்பல் ஏன் அவர் அணியில் இருக்கிறார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கார் விபத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பந்த் மீது இரக்க உணர்வு மட்டுமே இருப்பதால் இந்திய அணியில் இருப்பதாக கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
சஞ்சு சாம்சன் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார். அவருக்கு வாய்ப்பு வழங்கலாமென இந்திய ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் ஷுப்மன் கில் பதிலாக ருதுராஜை தேர்வு செய்யலாம் எனவும் கூறிவருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப் பந்த் பொறுப்புடன் விளையாட வேண்டும்: முகமது கைஃப்

அசத்தும் முன்னாள் சிஎஸ்கே வீரர்கள்..! ஏலத்தில் எடுக்காத பயிற்சியாளரை விமர்சிக்கும் ரசிகர்கள்!

தொடக்க வீரராக தொடர்வேனா? ரிஷப் பந்த் பேட்டி!

அணியை சிறப்பாக வழிநடத்தும் ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் பாராட்டு!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


