ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

புதிய யூடியூப் சேனல் தொடக்கம்: உலக சாதனை படைத்த ரொனால்டோ!

கிறிஸ்டியானோ ரொனால்டோ யூடியூப் சேனல் தொடங்கி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ - படங்கள்: கிறிஸ்டியானோ ரொனால்டோ / எக்ஸ்

Published On :22 ஆகஸ்ட் 2024, 1:24 pm IST

39 வயதாகும் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டது 2022-லும் நிறைவேறவில்லை.

போர்ச்சுகல் அணிக்காக130 கோல்களும் ஒட்டுமொத்தமாக 897 கோல்களையும் ரொனால்டோ அடித்துள்ளார்.

யுஆர் கிறிஸ்டியோனா என்ற பெயரில் ரொனால்டோ புதியதாக யூடியூப் சேனலை தொடங்கினார். 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் (1 கோடி) சப்ஸ்கிரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

ஆண்டுக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 16ஆயிரம் கோடி ரூபாய்)க்கு ரொனால்டோ வை சௌதியின் கிளப் அணி ஒப்பந்தம் செய்தது. 2025 வரை இந்த அணிக்காக விளையாட உள்ளார் ரொனால்டோ.

ஏற்கனவே சமூக வலைதளங்களில் எக்ஸில் 112.5 மில்லியன் ஃபாலோயர்களும் முகநூலில் 170 மில்லியன் ஃபாலோயர்களும் இன்ஸ்டாவில் 636 மில்லியன் ஃபாலோயர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக ஹேம்ஸ்டர் கோம்பட் 7 நாள்களில் இந்த சாதனையை படைத்திருந்தார். இதை ஒரே நாளில் முறியடித்து ரொனோல்டா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.