ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர் (27) மரணம்!

உருகுவே நாட்டைச் சேர்ந்த 27 வயதான கால்பந்து வீரர் மைதானத்தில் மயங்கி விழுந்து சிகிச்சைப் பலனின்றி தற்போது மரணமடைந்துள்ளார்.

News image

ஜுவான் இப்கியர்தோ. - படம்: நேஷ்னல் கால்பந்து கிளப் /எக்ஸ்

Updated On :28 ஆகஸ்ட் 2024, 6:48 pm IST

உருகுவே நாட்டைச் சேர்ந்த 27 வயதான கால்பந்து வீரர் ஜுவான் இப்கியர்தோ கடந்த ஆக.22ஆம் தேதி மைதானத்தில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ஜுவான் இப்கியர்தோ 1997இல் உருகுவே நாட்டில் பிறந்தவர். அந்நாட்டிற்காக கால்பந்தில் டிபெண்டராக விளையாடி வந்தார். மொத்தம் 115 போட்டிகளில் (கிளப் போட்டிகள் உள்பட) விளையாடியுள்ளார். அதில் 7 கோல்களும் அடித்துள்ளார்.

ஆக.22ஆம் தேதி கோபா லிபர்டாடோர்ஸ் போட்டியின் 84ஆவது நிமிடத்தில் யாருடனும் மோதாமல் அவராகவே தானாக மயங்கி விழுந்தார்.

பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட இவர் 5 நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனை நேஷ்னல் ( ஸ்பேனிஷில் நசியுனல்) கால்பந்து அணி தனது அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில் அந்த அணி கூறியதாவது:

”நமது கிளப்பினைச் சேர்ந்த ஜுவான் இப்கியர்தோ மரணமடைந்ததை மிகுந்த வருத்தத்துடனும் அதிர்ச்சியுடனும் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது குடும்பம், நண்பர்கள், அணியின் சக வீரர்களுக்கும் அவருக்கு பிரியமானவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்புக்கு நேஷ்னல் அணி துயருறுகிறது” எனப் பதிவிட்டுள்ளது.

இந்த துயரத்தினை முன்னிட்டு உருகுவேவின் முதல் தர, இரண்டாம் தர கால்பந்தாட்ட போட்டிகளை வார இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பிரேசிலின் கால்பந்தாட்ட ஊடக பிரிவின் தலைவர் சௌ பாலோ , “கால்பந்தாட்டத்தின் சோகமான நாள்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.