தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சிங்க்ஃபீல்டு கோப்பையை வென்றார் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா! பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத்தொகை எவ்வளவு?

கிராண்ட் செஸ் டூரின் சிங்க்ஃபீல்டு கோப்பையை வென்றார் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா.

News image

சிங்க்ஃபீல்டு கோப்பையை வென்றார் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா - படம்: கிராண்ட் செஸ் டூர் /எக்ஸ்

Updated On :29 ஆகஸ்ட் 2024, 6:59 am

கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியாக நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் கோப்பியை வென்றார் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா.

அமெரிக்காவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியின் கடைசி சுற்றில் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா பிரக்ஞானந்தாவுடன் மோதினார். இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. மற்றுமொரு இந்தியரான குகேஷும் டிரா செய்தார்.

இறுதியாக புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா.

அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா 5.5 புள்ளிகளுடன் 2ஆம் இடம் பிடித்தார். 4ஆம் இடத்தை பிரக்ஞானந்தா, குகேஷ், வெஸ்லி சோ ஆகியோர் பகிர்ந்துகொண்டனர்.

முதலிடம் பிடித்த அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.83 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இந்தியர்களான பிரக்ஞானந்தா, குகேஷுக்கு தலா ரூ.18 லட்சம் பரிசுத் தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.