லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

சச்சின் டெண்டுல்கரை சந்தித்த மனு பாக்கர்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நேரில் சந்தித்துள்ளார்.

News image

பதக்கங்களுடன் சச்சின் டெண்டுல்கரை சந்தித்த மனு பாக்கர் - படம் | மனு பாக்கர் (எக்ஸ்)

Updated On :30 ஆகஸ்ட் 2024, 7:31 pm IST

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நேரில் சந்தித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார் மனு பாக்கர். மேலும், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நேரில் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக மனு பாக்கர் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அவரது பயணம் எனக்கும், என்னைப் போன்று இலக்கினை நோக்கி பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. மறக்க முடியாத நினைவுகளை கொடுத்தற்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

மனு பாக்கருக்கு பதிலளித்து சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டிருப்பதாவது: உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் சந்தித்தது உண்மையில் சிறப்பான தருணமாக இருந்தது. பெரிய இலக்குகளை நோக்கி பல கனவுகளுடன் முன்னேறும் இளம் பெண்களுக்கு உங்களது வெற்றிக் கதை உந்து சக்தியாக உள்ளது. இந்தியாவுக்காக நீங்கள் மேலும் பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும். இந்தியா உங்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.