19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இன்று (பிப்ரவரி 6) விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்து வருகிறது.
இதையும் படிக்க: அணியில் இடம்பெற இஷான் கிஷன் இதனை செய்ய வேண்டும்: ராகுல் டிராவிட்
இதுவரை நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று உலகக் கோப்பைத் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.