3-வது டெஸ்ட்: இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ரோஹித், ஜடேஜா!

இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா.
இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 15) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மன் கில் 0 ரன்களிலும், ரஜத் படிதார் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா சதம் விளாசியும், ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்தும் அசத்தினர். இருப்பினும், ரோஹித் சர்மா 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, ரவீந்திர ஜடேஜாவுடன் சர்ஃபராஸ் கான் ஜோடி சேர்ந்தார்.

தற்போது ரவீந்திர ஜடேஜா மற்றும் சர்ஃபராஸ் கான் களத்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com