தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

ஐபிஎல் தொடங்கும் தேதி அறிவிப்பு!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2024, 4:58 pm IST

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கும் எனவும், தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெறும் எனவும் ஐபிஎல் தொடரின் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் காரணத்தால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கும் எனவும், தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெறும் எனவும் ஐபிஎல் தொடரின் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரை வருகிற மார்ச் 22 முதல் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். முதற்கட்டமாக சில போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிடுவோம். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெறும் என்றார்.

நடப்பு சாம்பியனாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.