ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கும் எனவும், தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெறும் எனவும் ஐபிஎல் தொடரின் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் காரணத்தால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கும் எனவும், தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெறும் எனவும் ஐபிஎல் தொடரின் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரை வருகிற மார்ச் 22 முதல் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். முதற்கட்டமாக சில போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிடுவோம். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெறும் என்றார்.
நடப்பு சாம்பியனாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று முதல் சங்கவி - எதிர்நீச்சல் நடிகையின் பக்தித் தொடர்!

தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

பரபரப்பான கிளைமேக்ஸ்... ஒரே நாளில் நிறைவடைந்த இரண்டு தொடர்கள்!

இன்று முதல் ஒளிபரப்பாகும் துளசி தொடர்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




