இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் முறையாக தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்திலும் , ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் 434 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவியது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கான டெஸ்ட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.
கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து அணியை 22 டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் வழிநடத்தியுள்ளார். அதில் இங்கிலாந்து 14 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.