தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக இரண்டு தோல்விகள்!

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் முறையாக தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2024, 6:39 pm IST

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் முறையாக தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்திலும் , ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் 434 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவியது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கான டெஸ்ட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.

கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து அணியை 22 டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் வழிநடத்தியுள்ளார். அதில் இங்கிலாந்து 14 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.