உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை: முன்னாள் இந்திய வீரர்

டி20  உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்துக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை: முன்னாள் இந்திய வீரர்

டி20  உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்துக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ஜித்தேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சனுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கான கீப்பர் யார் என்ற கேள்விக்கு நமக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் ஜித்தேஷ் சர்மா விளையாடினார். மூன்றாவது போட்டியில் மட்டும் சஞ்சு சாம்சன் விளையாடினார். முதல் டி20 போட்டியில் ஜித்தேஷ் சர்மா நன்றாக விளையாடினார். இரண்டாவது போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கடைசி டி20 போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் கீப்பராக யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என என்னிடம் கேட்டால், யாரை தேர்ந்தெடுப்பது எனத் தெரியவில்லை என நான் கூறுவேன். அணியில் ஜித்தேஷ் சர்மாவின் இடம் உறுதியாகவில்லை. சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சில நாள்களாக இந்தப் போட்டியில் இஷான் கிஷன் இடம்பெறவில்லை என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com