நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்து புஜாரா சாதனை!

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த  4-வது இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் புஜாரா படைத்துள்ளார்.

News image
Updated On :21 ஜனவரி 2024, 8:04 pm IST

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த  4-வது இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் புஜாரா படைத்துள்ளார்.

ரஞ்சிப் போட்டியில் விதர்பா மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது புஜாரா இந்த சாதனையைப் படைத்தார். ரஞ்சிக் கோப்பையில் விதர்பா மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கிடையில் நேற்று முன் தினம் (ஜனவரி 19) தொடங்கிய போட்டி இன்று நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் சௌராஷ்டிரா 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் சௌராஷ்டிர அணிக்காக விளையாடிய புஜாரா முதல் இன்னிங்ஸில் 43 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்களும் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்கள் எடுத்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 

இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.