கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்து புஜாரா சாதனை!

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த  4-வது இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் புஜாரா படைத்துள்ளார்.

News image
Updated On :21 ஜனவரி 2024, 2:34 pm

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த  4-வது இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் புஜாரா படைத்துள்ளார்.

ரஞ்சிப் போட்டியில் விதர்பா மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது புஜாரா இந்த சாதனையைப் படைத்தார். ரஞ்சிக் கோப்பையில் விதர்பா மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கிடையில் நேற்று முன் தினம் (ஜனவரி 19) தொடங்கிய போட்டி இன்று நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் சௌராஷ்டிரா 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் சௌராஷ்டிர அணிக்காக விளையாடிய புஜாரா முதல் இன்னிங்ஸில் 43 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்களும் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்கள் எடுத்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 

இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.