நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிகரமான சுழற்பந்துவீச்சு ஜோடி இவர்கள்தான்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான சுழற்பந்துவீச்சு இணையாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா மாறியுள்ளனர்.

News image
Updated On :26 ஜனவரி 2024, 7:16 pm IST

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான சுழற்பந்துவீச்சு இணையாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா மாறியுள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் இங்கிலாந்து அணியின் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் அஸ்வின் - ஜடேஜா இணை புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சு இணையாக அஸ்வின் - ஜடேஜா இணை மாறியுள்ளது. இருவரும் இணைந்து 50 போட்டிகளில் விளையாடி இதுவரை 506 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக எடுத்துள்ளனர். 

Story image

இதற்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் 501 விக்கெட்டுகளை (54 போட்டிகளில்) வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிகரமான சுழற்பந்துவீச்சு இணையாக அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.