3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என நினைக்கவில்லை: இங்கிலாந்து வீரர்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :26 ஜனவரி 2024, 10:59 am

DIN

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று (ஜனவரி 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி அதிரடியாக 80 ரன்கள் சேர்த்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் தெரிவித்துள்ளார். 

Story image

இது தொடர்பாக முதல் நாள்  ஆட்டம் முடிவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் போதுமான அளவுக்கு ரன்கள் எத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆடுகளம் முதல் நாளிலேயே சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவானதாக இருந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். இந்திய அணியின்  தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எப்போதும் இதுபோன்று அதிரடியாக விளையாடுவதில்லை. அவர்கள் அதிரடியாக விளையாடுகிறார்கள் என்றால், ஆடுகளத்தின் தன்மை அடுத்தடுத்த நாள்களில் சிறிது மோசமாக மாறப்போகிறது என நினைக்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.