ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

விம்பிள்டன் தொடரிலிருந்து விலகும் பிரபல டென்னிஸ் வீராங்கனை!

காயம் காரணமாக விம்பிள்டன் தொடரிலிருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா விலகுவதாக அறிவித்துள்ளார்.

News image

அரினா சபலென்கா (கோப்புப் படம்)

Updated On :1 ஜூலை 2024, 7:00 pm IST

காயம் காரணமாக விம்பிள்டன் தொடரிலிருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான அரினா சபலென்கா, முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை எமினா பெக்டாஸுடன் மோதுவதாக இருந்தது.

இந்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிஸிலிருந்து அரினா சபலென்கா விலகுவதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எனக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனது தோள்பட்டை காயம் எனக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்குகிறது. என்னால் எல்லாம் செய்ய முடிகிறது. டென்னிஸ் பயிற்சியில் ஈடுபடுகிறேன். ஆனால், பந்தை சர்வீஸ் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. அது எனக்கு மிகுந்த தொந்தரவை கொடுக்கிறது. அதிக எடைகொண்ட பொருள்களைக் கொடுத்து அதனை தூக்குங்கள் என்றால், தாராளமாக தூக்கி விடுவேன். ஆனால், சர்வீஸ் போட சொன்னால் எனக்கு மிகுந்த வலி ஏற்படுகிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து விட்டேன். அனைத்து விதமான சிகிச்சை பெற்றும் பயனில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.