ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்பு குறித்து பேசிய கௌதம் கம்பீர்!

டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ள இந்திய அணிக்கு முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News image

கௌதம் கம்பீர் - படம் | கேகேஆர் (எக்ஸ்)

Updated On :30 ஜூன் 2024, 4:16 pm IST

டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ள இந்திய அணிக்கு முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணிக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் நடைபெறுவதைக் காட்டிலும் சிறப்பானதாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிடிஐ-ல் அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பையை வெல்ல மிக முக்கிய பங்காற்றிய இருவரும் தங்களது ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறந்த வீரர்கள். உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் ஓய்வு பெற்றது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் நடைபெறுவதைவிட சிறப்பானது. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் நிறைய பங்காற்றியுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்றார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.