இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தன்னை நினைத்து பெருமைப்படுவார் என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று (ஜூலை 7) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா சதம் விளாசி அசத்தினார். அவர் 47 பந்துகளில் 100 ரன்கள் (7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், தனது குருவான யுவராஜ் சிங் தன்னை நினைத்து பெருமைப்படுவார் என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அபிஷேக் சர்மா பேசியதாவது: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டிக்குப் பிறகு யுவராஜ் சிங்கிடம் பேசினேன். நான் டக் அவுட் ஆனதற்கு அவர் ஏன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் எனத் தெரியவில்லை. இது நல்ல தொடக்கம் எனவும் கூறினார். ஆனால், 2-வது போட்டியில் நான் விளையாடிய விதத்தை நினைத்து அவர் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைவார்.
நான் சிறப்பாக விளையாடுவதற்கு காரணம் யுவராஜ் சிங் தான். என்னை சிறந்த வீரராக உருவாக்க அவர் கடினமாக உழைத்துள்ளார். 2-3 ஆண்டுகளாக அவர் எனது கிரிக்கெட் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, எனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காவும் கடினமாக உழைத்துள்ளார் என்றார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மிகவும் முக்கியம்: பயிற்சியாளர்

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!

திவிஷா சர்மா மரணம்! கருக்கலைப்பு, ரூ.7 லட்சம் என விசாரணையை திசைதிருப்பிய கணவர்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies






