இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தன்னை நினைத்து பெருமைப்படுவார் என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று (ஜூலை 7) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா சதம் விளாசி அசத்தினார். அவர் 47 பந்துகளில் 100 ரன்கள் (7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், தனது குருவான யுவராஜ் சிங் தன்னை நினைத்து பெருமைப்படுவார் என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அபிஷேக் சர்மா பேசியதாவது: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டிக்குப் பிறகு யுவராஜ் சிங்கிடம் பேசினேன். நான் டக் அவுட் ஆனதற்கு அவர் ஏன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் எனத் தெரியவில்லை. இது நல்ல தொடக்கம் எனவும் கூறினார். ஆனால், 2-வது போட்டியில் நான் விளையாடிய விதத்தை நினைத்து அவர் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைவார்.
நான் சிறப்பாக விளையாடுவதற்கு காரணம் யுவராஜ் சிங் தான். என்னை சிறந்த வீரராக உருவாக்க அவர் கடினமாக உழைத்துள்ளார். 2-3 ஆண்டுகளாக அவர் எனது கிரிக்கெட் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, எனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காவும் கடினமாக உழைத்துள்ளார் என்றார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!

அபிஷேக் சர்மா, ஆண்ட்ரே ரஸ்ஸலை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் சூர்யவன்ஷி!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

அபிஷேக் சர்மா எளிதாக சதங்கள் விளாசுகிறார்: புஜாரா
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை




