பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

37 வயது, 37ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்! அல்கராஸை பழி தீர்ப்பாரா?

விம்பிள்டன் அரையிறுதியில் வென்று 10ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார் ஜோகோவிச்.

ஜோகோவிச், அல்கராஸ்.

Published On :

இந்தாண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 10ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.

லண்டன் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் நோவக் ஜோகோவிச் உடன் மோதவிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் காயம் காரணமாக விலகினார். இதனால் ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.

அரையிறுதியில் இத்தாலியின் லொரென்ஸோ முசெட்டியுடன் ஜோகோவிச் மோதினார்.

முதல் செட்டில் 6-4 வென்ற ஜோகோவிச் இரண்டாவது செட்டில் 7 -6 (7-2) செட்டில் போராடி வென்றார். மூன்றாவது செட்டினை 6-4 என எளிதாக வென்றார்.

இதன்மூலம் இறுதிப் போட்டியில் மீண்டும் அல்கராஸ் உடன் மோதுகிறார் ஜோகோவிச். கடந்தாண்டு விம்பிள்டனில் அல்கராஸ் சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஜோகோவிச் பழிதீர்ப்பாரா என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி லண்டனில் நடைபெறுகிறது. 37 வயதில் 37ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.