வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2024, 6:59 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.

இந்த டெஸ்ட் தொடர் வெற்றியின்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு 10 புள்ளிகளைப் பெற்றுத் தந்தது.

ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவிகிதம் 59.09-ல் இருந்து 62.50 ஆக உயர்ந்து தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணியின் வெற்றி சதவிகிதம் 60-ல் இருந்து 50 ஆக குறைந்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையிலும் நியூசிலாந்து 3-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 68.51 சதவிகித வெற்றிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.