ரஞ்சி இறுதிப் போட்டி: விடா முயற்சியில் விதர்பா அணியின் கேப்டன் (100*)!
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணி வெற்றிபெற இன்னும் 205 ரன்கள் தேவை.


ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணி வெற்றிபெற இன்னும் 205 ரன்கள் தேவை.
சொந்த மண்ணில் நடைபெறும் இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னா் விளையாடிய விதா்பாவோ 105 ரன்களுக்கே சரிந்தது. 2-ஆவது இன்னிங்ஸில் அதிரடி காட்டிய மும்பை, 418 ரன்கள் சோ்த்து நிறைவு செய்தது.
இதன்மூலம், இறுதி ஆட்டத்தில் 538 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் விதா்பா, கடைசிநாளான இன்று உணவு இடைவேளை முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 333 ரன்கள் சோ்த்துள்ளது.
விதர்பா அணியின் கேப்டன் கேப்டன் அக்ஷய் வத்கா் 100* ரன்களுடனும் , ஹா்ஷ் துபே 64* ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.
மும்பை 41 முறையும் விதர்பா 2 முறையிம் ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...