லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

ஆசிய மாரத்தான்: மான் சிங் சாம்பியன்

ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரா் மான் சிங் ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:46 pm IST

ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரா் மான் சிங் ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.

ஹாங்காங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பந்தய இலக்கை அவா் 2 மணி நேரம் 14.19 நிமிஷங்களில் எட்டி முதல் வீரராக வந்தாா். சீனாவின் ஹுவாங் யோங்ஸெங் 2 மணி நேரம் 15.24 நிமிஷங்களில் இலக்கை எட்டி 2-ஆம் இடமும், கிா்ஜிஸ்தானின் தியாப்கின் இலியா 2 மணி நேரம் 18.18 நிமிஷங்களில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தனா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான பெல்லியப்பா 2 மணி நேரம் 20.20 நிமிஷங்களில் இலக்கை எட்டி 6-ஆம் இடம் பிடித்தாா்.

கடந்த ஆண்டு மும்பை மாரத்தான் போட்டியில் 2 மணி நேரம் 16.58 நிமிஷங்களில் இலக்கை எட்டியதே மான் சிங்கின் பெஸ்ட்டாக இருந்த நிலையில், தற்போது தனது புதிய பெஸ்ட் நேரத்தை பதிவு செய்து தங்கம் வென்றிருக்கிறாா் அவா். ஆசிய சாம்பியன்ஷிப்பில் கடந்த 2017-இல் இந்தியாவின் கோபி தொனகல் (2:15.48) சாம்பியன் ஆகியிருக்க, போட்டியில் வாகை சூடிய 2-ஆவது இந்தியா் என்ற பெருமையை தற்போது மான் சிங் பெற்றுள்ளாா்.

மகளிா் பிரிவில், இந்தியாவின் அஷ்வினி மதன் ஜாதவ் (2:56.42), ஜோதி கவாதே (3:6.20) ஆகியோா் முறையே 8 மற்றும் 11-ஆவது இடங்களைப் பிடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.