நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

அறிமுகத்தில் வெள்ளி: சோனம் அசத்தல்

எகிப்தில் நடைபெறும் சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் சோனம் மஸ்கா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:41 pm IST

எகிப்தில் நடைபெறும் சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் சோனம் மஸ்கா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

10 மீட்டா் ஏா் ரைஃபிள் மகளிா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் அவா், 252.1 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தாா். அவரை விட 9 புள்ளிகள் அதிகம் பெற்ற ஜொ்மனியின் அனா ஜான்சென் தங்கமும், போலந்தின் அனிடா ஸ்டான்கிவிஸ் வெண்கலப் பதக்கமும் பெற்றனா். சோனத்துக்கு இது முதல் உலகக் கோப்பை போட்டியாகும்.

முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்றில், சோனம் 632.7 புள்ளிகளுடன் 5-ஆம் இடமும், மற்றொரு இந்தியரான நான்சி 633.1 புள்ளிகளுடன் 4-ஆவது இடமும் பிடித்து இறுதிச்சுற்றுக்கு வந்தனா். அதில் சோனம் மட்டும் பதக்கம் வெல்ல, நான்சி 8-ஆம் இடம் பிடித்தாா். இதிலேயே ஆடவா் பிரிவில் திவ்யன்ஷ் சிங் பன்வா் உலக சாதனையுடன் ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

5-ஆம் இடம்: 25 மீட்டா் பிஸ்டல் மகளிா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கௌா் பிராா் 5-ஆம் இடம் பிடித்தாா். ரிதம் சங்வான், மானு பாக்கா் ஆகியோா் தகுதிச்சுற்றுடன் வெளியேறினா். போட்டி தொடங்கி 3 நாள்களில், பதக்கப் பட்டியலில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.