குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

எல் கிளாசிக்கோ உறுதி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பார்சிலோனா!

ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதியில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் பார்சிலோனா வீரர்கள். - படம்: ஏபி

Updated On :3 ஏப்ரல் 2025, 11:15 am IST

ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதியில் பார்சிலோனா அணி அத்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது.

ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதி லெக் 1 ஆட்டத்தில் 4-4 என சமைநிலையில் இருக்க லெக் 2 ஆட்டத்தில் 1-0 என பார்சிலோனா அணி முன்னிலை பெற்றது.

27ஆவது நிமிஷத்தில் ஃபெர்ரன் டோரஸ் கோல் அடித்தார். அத்லெடிகோ மாட்ரிட் எவ்வளவு முயற்சித்தும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

அத்லெடிகோ மாட்ரிட் ஆஃப் சைடில் ஒரு கோல் அடித்து வீணானது.

மொத்தமாக 5-4 என பார்சிலோனா அணி அசத்தல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப் போட்டியில் எல் கிளாசிக்கோ

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் உடன் பார்சிலோனா மோதுகிறது.

இந்த ஆண்டு மட்டும் இது 2ஆவது இறுதிப் போட்டியாகும். ஏற்கனவே, ஜனவரியில் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் 5-2 என பார்சிலோனா ரியல் மாட்ரிட்டை வென்றது.

கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் பார்சிலோனா வென்றுள்ளன.

ஸ்பானிஷ் கோப்பை வரலாற்றில் பார்சிலோனா 31 முறையும் ரியல் மாட்ரிட் 20 முறையும் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.