அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

எல் கிளாசிக்கோ உறுதி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பார்சிலோனா!

ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதியில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.

கோல் அடித்த மகிழ்ச்சியில் பார்சிலோனா வீரர்கள். - படம்: ஏபி

Published On :3 ஏப்ரல் 2025, 11:17 am IST

ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதியில் பார்சிலோனா அணி அத்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது.

ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதி லெக் 1 ஆட்டத்தில் 4-4 என சமைநிலையில் இருக்க லெக் 2 ஆட்டத்தில் 1-0 என பார்சிலோனா அணி முன்னிலை பெற்றது.

27ஆவது நிமிஷத்தில் ஃபெர்ரன் டோரஸ் கோல் அடித்தார். அத்லெடிகோ மாட்ரிட் எவ்வளவு முயற்சித்தும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

அத்லெடிகோ மாட்ரிட் ஆஃப் சைடில் ஒரு கோல் அடித்து வீணானது.

மொத்தமாக 5-4 என பார்சிலோனா அணி அசத்தல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப் போட்டியில் எல் கிளாசிக்கோ

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் உடன் பார்சிலோனா மோதுகிறது.

இந்த ஆண்டு மட்டும் இது 2ஆவது இறுதிப் போட்டியாகும். ஏற்கனவே, ஜனவரியில் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் 5-2 என பார்சிலோனா ரியல் மாட்ரிட்டை வென்றது.

கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் பார்சிலோனா வென்றுள்ளன.

ஸ்பானிஷ் கோப்பை வரலாற்றில் பார்சிலோனா 31 முறையும் ரியல் மாட்ரிட் 20 முறையும் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.