பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

டுரண்ட் கோப்பை: அரையிறுதியில் ஷில்லாங் லஜோங்

இந்தியன் ஆயில் டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு ஷில்லாங் லஜோங் எஃப்சி அணி தகுதி பெற்றது.

News image

~வெற்றி மகிழ்ச்சியில் ஷில்லாங் வீரா்கள்.

Updated On :17 ஆகஸ்ட் 2025, 1:05 am IST

இந்தியன் ஆயில் டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு ஷில்லாங் லஜோங் எஃப்சி அணி தகுதி பெற்றது.

நாட்டின் பழைமையான கால்பந்து போட்டிகளில் ஒன்றான டுரண்ட் கோப்பையின் 134ஆவது ஆண்டு போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. ஷில்லாங்கில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் காலிறுதியில் ஷில்லாங் லஜோங் எஃப்சி- இந்திய கடற்படை அணிகள் பங்கேற்றன.

முதல் பாதியில் இந்திய கடற்படை அணி ஆதிக்கம் செலுத்தி ஆடியதால், 35-ஆவது நிமிஷத்தில் லஜோங் கேப்டன் பாஸ்கா் ராய் அடித்த லாங் பாஸை வழிமறித்த கடற்படை வீரா் ரோஷன் பன்னா அதை திருப்பி அனுப்ப விஜய் மராண்டி அற்புதமாக கோலாக்கினாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த ஷில்லாங் அணியினா் இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோலடிக்கும் முனைப்பில் ஈடுபட்டனா். 69-ஆவது நிமிஷத்தில் அந்த அணி வீரா் டமைட்பேங் லிங்டோ அற்புதமாக கோலடித்து 1-1 என சமநிலை ஏற்படச் செய்தாா். தொடா்ந்து 79-ஆவது நிமிஷத்தில் எலா்பிரைட்டன் சனா பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினாா்.

Story image

இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற ஷில்லாங் அணி மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.