நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இறுதிப் போட்டிக்கு தேர்வானது பார்சிலோனா!

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா 2-0 என அபாரமாக வெற்றி பெற்றது.

News image

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பார்சிலோனா வீரர்கள். - படம்: ஏபி

Updated On :9 ஜனவரி 2025, 11:29 am IST

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதியில் பார்சிலோனா - அத்லெடிக் பில்பாவ் அணிகள் கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி ஆடுகளத்தில் மோதிய அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா 2-0 என அபாரமாக வெற்றி பெற்றது.

இதன்மூலம் பார்சிலோனா அணி ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

பார்சிலோனா அணியில் 17 நிமிஷத்திலும் 52ஆவது நிமிஷத்திலும் முறையே கவி, லாமின் யமால் கோல் அடித்து அசத்தினார்கள்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் லாமின் யமால்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் லாமின் யமால். - படம்: ஏபி

மற்றுமொரு அரையிறுதியில் ரியல் மாட்ரிட் அணியுடன் மல்லோர்கா அணி மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி ஜன.10ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதுவரை ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை தொடரில் பார்சிலோனா அணி 14 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரியல் மாட்டிட் 13 முறை வென்று இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இறுதிப் போட்டி ஜன.13 இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும். இறுதிப் போட்டியில் மீண்டும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகள் மோதினால் எல் கிளாசிக்கோ போட்டியாக அமையும்.

கால்பந்து ரசிகர்கள் இந்தப் போட்டிக்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.