பார்சிலோனாவின் விடாமுயற்சி..! 2-4லிருந்து 5-4 என த்ரில் வெற்றி!

சாம்பியன் லீக்கில் பார்சிலோனா அணி 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
வெற்றிக் களிப்பில் பார்சிலோனா அணியினர்.
வெற்றிக் களிப்பில் பார்சிலோனா அணியினர். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

சாம்பியன் லீக்கில் பார்சிலோனா அணி 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் யுஇஎப்ஏ சாம்பியன் லீக்கின் அசத்தலான போட்டி இன்று நடைபெற்றது. அதில் பார்சிலோனா அணியும் பெனிபிசியா அணியும் மோதின.

முதல் பாதி முடிவில் பார்சிலோனா 1-3 என பின் தங்கியிருந்தது. இரண்டாம் பாதியின் தொடக்கத்திலும் பார்சிலோனா அணி பிந்தங்கியே இருந்தது.

ஒரு கட்டத்தில் 2-4 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா பின் தங்கியிருந்தது.

பின்னர், மீண்டெழுந்த பார்சிலோனா கடைசியில் 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் லெவண்டாவ்ஸ்கி (13’,78’) இரண்டு கோல்களும் எரிக் கிராஸியே (86’) ஒரு கோலும் அடித்தார்கள்.

ரபினா (64’, 90+6’) இரண்டு கோல்கள் அடித்தார். இறுதிக் கட்டத்தில் 96ஆவது நிமிஷத்தில் அவர் அடித்த அற்புதமான கோலினால் பார்சிலோனா வெற்றியுடன் முடித்தது.

இந்த ஆண்டின் சிறந்த போட்டியாக இதுவே இருக்குமென கால்பந்து ரசிகர்களும் வர்ணனையாளர்களும் கூறுகிறார்கள்.

இந்தப் போட்டியில் 5 மஞ்சள் கார்டுகள், 1 ரெட் கார்டும் கொடுக்கப்பட்டன. பெனால்டி வாய்ப்புகள் தேவையில்லாமல் பார்சிலோனா அணிக்கு வழங்கப்பட்டதாக எதிரணி ரசிகர்கள் இந்தப் போட்டியை, “இந்தாண்டின் மிகச் சிறந்த திருட்டு” எனக் கூறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com