திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சாம்பியன் லீக்: விறுவிறுப்பாக முடிந்த லீக் சுற்று..! 36இல் 24 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி!

ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் சாம்பியன் லீக் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன.

News image

மான்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட் அணியினர். - படங்கள்: பிடிஐ

Updated On :30 ஜனவரி 2025, 2:16 pm IST

ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் சாம்பியன் லீக் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. மிகவும் பிரபலமான கால்பந்து தொடர்களில் இது முக்கியமானதாகும்.

இதில் மொத்தம் 36 அணிகள் பங்குபெற்றன. அதில் அடுத்த கட்டதுக்கு 24 அணிகள் தேர்வாகியுள்ளன.

புதிய விதியமுறைகளின்படி முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக ரவுண்ட ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

மான்செஸ்டர் சிட்டி 3-1 என வென்று நாக் -அவுட் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றது.

9-24ஆம் இடங்களைப் பிடித்த அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதிலுள்ள 16 அணிகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று அதில் வெல்லும் 8 அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதிபெறும்.

முதல் எட்டு இடங்களில் முறையே லிவர்பூல், பார்சிலோனா, ஆர்சனெல், இண்டர் மிலன், அட்லெட்டி, லெவெர்குசென், லிட்டில், அஸ்டன் வில்லா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

நாக்-அவுட் பிளே ஆப் சுற்றில் 24 அணிகள் தேர்வகியுள்ளன. பிரபலமான ரியல் மாட்ரிட், பெய்ர்ன் முனிச், பிஎஸ்ஜி, மான்செஸ்டர் அணிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.