மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் மின்சார வாரிய கட்டுப்பாட்டு மையத்தை 94987 94987 | 1912 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் - தமிழக அரசு சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடும் கேகேஆர்; தாயகம் திரும்பும் ரச்சின் ரவீந்திரா!

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போராடி வரும் நிலையில், அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா தாயகம் திரும்பியுள்ளார்.

News image

ரச்சின் ரவீந்திரா

Updated On :23 மே 2026, 8:43 pm IST

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போராடி வரும் நிலையில், அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா தாயகம் திரும்பியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நான்காவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் உள்ளன.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அவர்களது கடைசி லீக் ஆட்டத்தில் தோற்கும் பட்சத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கான பிளே ஆஃப் வாய்ப்பு அதிகமாகும். அவர்கள் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலை ஏற்படும்.

இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போராடி வரும் நிலையில், அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா தாயகம் திரும்பியுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடவுள்ளதால், அதற்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக ரச்சின் ரவீந்திரா தாயகம் திரும்புகிறார்.

இது தொடர்பாக ரச்சின் ரவீந்திரா தெரிவித்ததாவது: நடப்பு ஐபிஎல் தொடர் செல்லும் விதம் மற்றும் நான் கொல்கத்தா அணிக்காக அணியில் இடம்பெற்று விளையாடுவதில்லை என்பதை அணி நிர்வாகத்திடம் பேசினேன். தாயகம் திரும்பும் என்னுடைய முடிவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் புரிந்துகொண்டது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தார்.

நியூசிலாந்து - அயர்லாந்து இடையேயான டெஸ்ட் போட்டி வருகிற மே 27 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Summary

While the Kolkata Knight Riders team is battling to advance to the playoffs in the IPL tournament, the team's all-rounder, Rachin Ravindra, has returned to his home country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.