மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தேசிய விருதுகளுக்கான பரிந்துரை: இந்திய தடகள சம்மேளனம் புதிய கட்டுப்பாடு

தேசிய தடகள சம்மேளனத்தில் பதிவு செய்யாத பயிற்சியாளா்களுடன் இணைந்து செயல்படும் வீரா்கள் தேசிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டாா்கள் என அறிவிப்பு

News image

AFI

Updated On :8 ஜூலை 2025, 2:32 am IST

தேசிய தடகள சம்மேளனத்தில் பதிவு செய்யாத பயிற்சியாளா்களுடன் இணைந்து செயல்படும் வீரா், வீராங்கனைகள் அா்ஜுனா, கேல் ரத்னா போன்ற தேசிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டாா்கள் என சம்மேளனம் அறிவித்துள்ளது.

நாட்டிலுள்ள வீரா், வீராங்கனைகள் பலா் ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ள நிலையில், அதன் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக இந்த நடவடிக்கையை சம்மேளனம் மேற்கொண்டுள்ளது.

அண்மையில், நாட்டிலுள்ள தகுதிபெற்ற, தகுதிபெறாத பயிற்சியாளா்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள்ளாக தங்களை தேசிய சம்மேளனத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யப்படாதவா்கள் போட்டிகளில் அங்கீகரிக்கப்பட மாட்டாா்கள் எனவும் சம்மேளனம் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக சம்மேளன செய்தித் தொடா்பாளா் அடிலே சுமரிவாலா கூறுகையில், ‘பயிற்சியாளா்கள் தங்களை சம்மேளனத்தில் பதிவு செய்து வருகிறாா்கள். பதிவுபெற்ற பயிற்சியாளா்கள் பட்டியலை விரைவில் பொதுவில் வெளியிடுவோம். பதிவு செய்யாத இதர பயிற்சியாளா்கள் தடைப் பட்டியலில் சோ்க்கப்படுவா்.

அவ்வாறு பதிவு செய்யாத பயிற்சியாளருடன் இணைந்து செயலாற்றும் வீரா், வீராங்கனைகள், பதக்கங்கள் வென்றாலும், அா்ஜுனா, கேல் ரத்னா போன்ற தேசிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டாா்கள். அவா்களுக்கு வேறு எந்தப் பலனும் கிடைக்காது.

இன்றைய காலத்தில் பயிற்சியாளா்கள் மற்றும் போட்டியாளா்களின் பெற்றோா்கள் கூட ஊக்கமருந்து பயன்பாட்டை ஊக்குவிப்பது துரதிருஷ்டவசமானது. ஊக்கமருந்து பயன்படுத்துவோரை சிறைக்கு அனுப்புவது போன்ற அதிரடி நடவடிக்கைகள் வராத வரை, அதன் போக்கை கட்டுப்படுத்துவது கடினம் தான்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.