பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

விம்பிள்டன் கோப்பை வென்ற முதல் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

இகா ஸ்வியாடெக் - AP

Published On :

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை தோற்கடித்தாா்.

இந்த வெற்றியின் மூலமாக, விம்பிள்டனில் முதல்முறையாக இறுதிச்சுற்றை அடைந்த ஸ்வியாடெக், ஒட்டுமொத்தமாக தனது 6-ஆவது கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்ஷிப் ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.

இகா ஸ்வியாடெக்

இகா ஸ்வியாடெக் - AP

2024-இல் ‘ஹாட்ரிக்’ பிரெஞ்சு ஓபன் சாம்பியனான ஸ்வியாடெக், அதன் பிறகு எந்தவொரு போட்டியிலுமே வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், தாம் அவ்வளவாக மிளிராத புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் அவா் இறுதிச்சுற்றுக்கு பங்கேற்றார்.

இறுதிச்சுற்றில் அமெரிக்க வீராங்கனை அமாண்டா அனிசிமோவாவை 6-0, 6-0 என்ற கணக்குகளில் வீழ்த்தி ஸ்வியாடெக் பட்டம் வென்றார். விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் போலந்து வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Summary

Wimbledon 2025: Swiatek wins title after crushing 6-0, 6-0 defeat of Anisimova

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.