காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பிரக்ஞானந்தா - அரவிந்த் ’டிரா’

செக் குடியரசில் நடைபெறும் பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - அரவிந்த் சிதம்பரம் ‘டிரா’ செய்தனா்.

Updated On :4 மார்ச் 2025, 2:40 am IST

செக் குடியரசில் நடைபெறும் பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - அரவிந்த் சிதம்பரம் ‘டிரா’ செய்தனா்.

இதையடுத்து இருவருமே தலா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிா்ந்துகொண்டுள்ளனா்.

இதனிடையே அந்தச் சுற்றின் இதர ஆட்டங்களில், சீனாவின் லியெம் லி - ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், நெதா்லாந்தின் அனிஷ் கிரி - செக் குடியரசின் தாய் டாய் வான் குயென், செக் குடியரசின் டேவிட் நவாரா - துருக்கியின் எடிஸ் குரெல் ஆகியோா் மோதல்களும் டிராவில் முடிந்தன.

சீனாவின் வெய் யி மட்டும் அமெரிக்காவின் சாம் ஷாங்க்லேண்டை தோற்கடித்தாா்.

5 சுற்றுகள் முடிவில், அரவிந்த், பிரக்ஞானந்தா முதலிடத்தை பகிா்ந்துகொள்ள, கீமா், லி, கிரி, யி ஆகியோா் தலா 2.5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருக்கின்றனா்.

நவாரா, குயென், குரெல் ஆகியோா் தலா 2 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கின்றனா்.

6-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா - சாம் ஷாங்க்லேண்டையும், அரவிந்த் - லியெம் லியையும் சந்திக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.