திராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

கோல்கீப்பிங்கில் மாஸ்டர் கிளாஸ்..! சாதனை படைத்த இன்டர் மிலன் கோல்கீப்பர்!

இன்டர் மிலன் அணியின் கோல்கீப்பர் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

News image

பந்தினை தடுத்த இன்டர் மிலன் கோல்கீப்பர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். - படங்கள்: எக்ஸ் / சாம்பியன்ஸ் லீக்

Updated On :7 மே 2025, 5:20 pm IST

இன்டர் மிலன் அணியின் கோல்கீப்பர் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் இன்டர் மிலன் அணி 4-3 (7-6) வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் இன்டர் மிலன் அணியின் டிஃபென்ஸ் மிகவும் பலமாக இருந்தது.

இரண்டாம் கட்ட அரையிறுதியில் பார்சிலோன அணி 72 சதவிகிதம் பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் பெரிதாக கோல்கள் அடிக்க முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் இன்டர் மிலனின் டிஃபெண்டர்கள் மட்டுமல்ல, அந்த அணியின் கோல் கீப்பர் யான் சோமரும்தான். 37 வயதான இவர் இந்த சீசனில் அசத்தி வருகிறார்.

இந்த சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனாவுடனான அரையிறுதியில் (இரண்டு கட்ட போட்டிகள்) 14 கோல்களை தடுத்துள்ளார்.

2ஆம் கட்ட போட்டியில் இலக்கை நோக்கி அடிக்கப்பட்ட 10 பந்துகளையும் தடுத்து அசத்தினார். அதனால்தான் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.

கடைசி 15 சீசன்களில் சாம்பியன்ஸ் லீக்கில் இவ்வளவு முறை தடுத்த கோல்கீப்பர்கள் வரிசையில் 2ஆம் இடம் பிடித்து யான் சோமர் சாதனை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.