விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

காலிறுதியில் நிகாத் ஜரீன்

இங்கிலாந்தில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2025, 3:44 am IST

இங்கிலாந்தில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.

மகளிா் 51 கிலோ எடைப் பிரிவு ரவுண்ட் ஆஃப் 16-இல் அவா் 5-0 என்ற கணக்கில் ஜப்பானின் யுனா நிஷினகாவை வீழ்த்தினாா். அடுத்ததாக காலிறுதியில் நிகாத், ஒலிம்பிக்கில் இருமுறை வெள்ளி வென்றவரான துருக்கியின் புசே நஸ் காகிரோக்லுவை எதிா்கொள்கிறாா்.

இதனிடையே, ஆடவா் பிரிவில் 3 இந்தியா்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்று வெளியேறினா். 75 கிலோ பிரிவில் சுமித் குண்டூ 0-5 என நடப்பு ஐரோப்பிய சாம்பியனான பல்கேரியாவின் ரமி கிவானிடம் தோற்க, 60 கிலோ பிரிவில் சச்சின் சிவச் 1-4 என கஜகஸ்தானின் பிபாா்ஸ் ஜெஸெனிடம் தோல்வியுற்றாா்.

90+ கிலோ பிரிவில் நரேந்தா் பொ்வால் 1-4 என இத்தாலியின் டியேகோ லென்ஸியால் சாய்க்கப்பட்டாா். தற்போதைய நிலையில் களத்திலிருந்த 20 இந்தியா்களில், சுமாா் பாதிபோ் தோற்று வெளியேறிவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.