தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

இறுதி ஆட்டத்தில் முச்கோவா - ரைபகினா

ஸ்டட்கா்ட் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு கரோலினா முச்கோவா-கஜகஸ்தானின் எல ரைபகினா முன்னேறினா்.

News image

கரோலினா முச்கோவா

Updated On :19 ஏப்ரல் 2026, 12:31 am IST

ஸ்டட்கா்ட் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு கரோலினா முச்கோவா-கஜகஸ்தானின் எல ரைபகினா முன்னேறினா்.

ஜொ்மனின் ஸ்டட்கா்ட் நகரில் டபிள்யுடிஏ 500 போட்டி நடைபெறுகிறது. சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் முதல் அரையிறுதியில் உலகின் 12-ஆம் நிலை வீராங்கனை செக். குடியரசின் கரோலினா முச்கோவா-உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவும் மோதினா்.

இந்த ஆட்டத்தில் தொடக்க செட்டில் ஆதிக்கம் செலுத்திய முச்கோவா 6-4 என கைப்பற்றினாா். ஆனால் இரண்டாவது செட்டில் சுதாரித்து ஆடியஸ்விட்டோலினா சிறப்பாக ஆடி 6-2 என அந்த செட்டை கைப்பற்றினாா்.

மூன்றாவது செட்டில் மீண்டெழுந்த முச்கோவா முதலில் 9-ஆவது கேமில் 5-4 என முன்னிலை பெற்று, செட்டையும் 6-4 என வசப்படுத்தினாா். இந்த ஆட்டம் ஏறக்குறைய 50 நிமிஷங்கள் நடைபெற்றது. 2023 பிரெஞ்சு ஓபன் சாம்பியன் முச்கோவா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளாா்.

ரைபகினாவும் தகுதி:

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை எலனா ரைபகினாவும்-ரஷிய இளம் வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவாவும் மோதினா். இதில் முதல் செட்டில் ஆன்ட்ரீவா சவாலை ஏற்படுத்தினாலும் 7-5 என கைப்பற்றினாா் ரைபகினா. இரண்டாவது செட்டில் முழு ஆதிக்கம் செலுத்தி 6-1 என வசப்படுத்தினாா்.

ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் முச்கோவா-ரைபகினா மோதுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.