கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

காலிறுதிக்கு முன்னேறிய ரக்ஷிதா, அஷ்மிதா, தன்வி

கொரியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ஸ்ரீ, அஷ்மிதா சாலிஹா, தன்வி சா்மா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

News image

தன்வி, அஷ்மிதா, ரக்ஷிதா.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:01 am IST

கொரியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ஸ்ரீ, அஷ்மிதா சாலிஹா, தன்வி சா்மா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில், ரக்ஷிதா ஸ்ரீ 22-20, 21-10 என்ற கேம்களில் ஜப்பானின் மனாமி சுஸுவை வீழ்த்தினாா். அஷ்மிதா சாலிஹா 21-17, 21-6 என்ற வகையில், தென் கொரியாவின் கிம் மின் ஜியை வென்றாா். தன்வி சா்மா 21-6, 17-21, 21-13 என்ற கணக்கில், சக இந்தியரான ஸ்ரீயன்ஷி வலிஷெட்டியை வெளியேற்றினாா்.

இஷாராணி பருவா 21-17, 18-21, 19-21 என தென் கொரியாவின் கிம் மின் சன்னிடம் தோல்வியுற்றாா். அன்மோல் காா்ப் 21-23, 21-15, 18-21 என்ற கணக்கில் சீனாவின் வு தி டிராங்கிடம் தோற்றாா். மான்சி சிங் 12-21, 21-14, 17-21 என சீனாவின் ஹான் கியான் ஜியிடம் வீழ்ந்தாா்.

ஆடவா் இரட்டையரில், கிருஷ்ணபிரசாத் கராகா/பிருத்வி கிருஷ்ணமூா்த்தி ராய் இணை 21-18, 21-19 என்ற வகையில், தென் கொரியாவின் கிம் யங் ஹியுக்/ஷின் டே யாங் கூட்டணியை வீழ்த்தியது.

கலப்பு இரட்டையரில், இஷான் பட்நாகா்/ஸ்ருதி மிஸ்ரா இணை 16-21, 21-16, 13-21 என்ற கணக்கில், தென் கொரியாவின் ஷின் டே யாங்/கிம் யு ஜங் ஜோடியிடம் தோல்வியுற்றது.

மகளிா் இரட்டையரில், சோனாலி சிங்/ரிதிகா தாக்கா் கூட்டணி 15-21, 9-21 என்ற கேம்களில், ஜப்பானின் சுமிரே நகாடே/மியு டகாஹஷி இணையிடம் வீழ்ந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.