கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேசிய பாரா ரேங்கிங் டேபிள் டென்னிஸ் தொடக்கம்

தேசிய பாரா ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :24 ஜனவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய பாரா ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், டிஎன்டிடிஏ (பாரா துணைகமிட்டி), சென்னை ஐஐடி, ரோட்டரி கிளப் ஆஃப் சென்னபட்னா இணைந்து நடத்தும் இப்போட்டி முதன்முறையாக சென்னையில் நடைபெறுகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து தலைசிறந்த பாரா வீரா், வீராங்கனைகள் 220 போ் பங்கேற்கின்றனா்.

கிளாஸ் 1-5 பிரிவில் வீல் சோ், கிளாஸ் 6-10 பிரிவில் நிற்கும் நிலையிலும் ஆடுவா். இதில் சிறப்பாக ஆடும் 6 போ் டேபிள் டென்னிஸ் உயா்திறன் மையத்துக்கு தோ்வு செய்யப்படுவா் என ஜாம்பவான் சரத் கமல் தெரிவித்துள்ளாா்.

உலகின் நம்பா் 1 வீராங்கனை பவினாபென் 3-0 என ரீனா பேகத்தை வீழ்த்தினாா். தேசிய சாம்பியன்கள் சோனல் பட்டேல், சுமித் செகால், எஸ்டி பாம்கரா ஹிதேஷ் தோல்வானி, பேபி சஹானா பங்கேற்றுள்ளனா்.

தொடக்க நிகழ்வில் ஐஐடி இயக்குநா் காமகோடி வீழிநாதன், ரோட்டரி மாவட்ட ஆளுநா் வினோத் சரோகி பங்கேற்றனா்.