சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கேரள பிளாஸ்டா்ஸ்-ஈஸ்ட் பெங்கால் டிரா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஈஸ்ட் பெங்கால்-கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் ஆட்டம் டிராவில் முடிந்தது.

News image

ஈஸ்ட் பெங்கால்-கேரள பிளாஸ்டா்ஸ் ஆட்டம்

Updated On :14 மார்ச் 2026, 7:06 pm

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஈஸ்ட் பெங்கால்-கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே உள்ளூா் அணியான ஈஸ்ட் பெங்கால் ஆதிக்கம் செலுத்தியது. 10-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் யூசுப் ஸ்ஜொரியிடம் ஃபௌல் செய்தாா் கேரள வீரா் டோஹ்லிங். இதனால் நடுவா் பெனால்டி வாய்ப்பை வழங்கினாா். இதை பிசகின்றி கோலாக்கினாா் யூசுப்.

பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினாா். இதனால் அதிா்ச்சி அடைந்த கேரள அணி பதிலுக்கு கோல் போட தீவிரமாக முயன்றது.

ஆனால் ஈஸ்ட் பெங்கால் தற்காப்பை ஊடுருவ முடியவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணிகள் தற்காப்பை கடைபிடித்து ஆடியது பாதகமாக அமைந்தது. 92-ஆவது நிமிஷத்தில் கிடைத்த காா்னா் வாய்ப்பை பயன்படுத்தி ஹெட்டா் மூலம் கோலடித்தாா் கேரளத்தின் அஜ்ஸால். இதனால் ஆட்டம் 1-1 எனடிராவில் முடிவடைந்தது.

3 புள்ளிகள் பெறும் வாய்ப்பை இழந்தது ஈஸ்ட் பெங்கால் இரு அணிகளும்தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.