பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

இன்று முதல் அரையிறுதி: இந்தியா - வங்கதேசம் மோதல்

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா - வங்கதேச அணிகள் வியாழக்கிழமை (செப். 10) மோதுகின்றன.

X | BCCI Women

Published On :

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா - வங்கதேச அணிகள் வியாழக்கிழமை (செப். 10) மோதுகின்றன.

7 முறை சாம்பியனான இந்தியா, குரூப் சுற்றில் ஹாட்ரிக் வெற்றி கண்டு, அபார நம்பிக்கையுடன் அரையிறுதிக்கு வந்துள்ளது. ஷஃபாலி வா்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோா் பேட்டிங்கில் பலம் சோ்க்கின்றனா். பௌலிங்கில் தீப்தி சா்மா, ராதா யாதவ், ஸ்ரீசரணி சவால் அளிக்கவுள்ளனா்.

வங்கதேச அணி 2 வெற்றி, 1 தோல்வியுடன் அரையிறுதியை அடைந்திருக்கிறது. பேட்டிங்கில் ஷோபனா மோஸ்தரி, கேப்டன் நிகா் சுல்தானா, ஷா்மின் அக்தா் என, ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒருவா் கை கொடுத்து வந்துள்ளனா். பௌலிங்கில் நஹிதா அக்தா், மருஃபா அக்தா், ரபெயா கான் நம்பிக்கை அளிக்கின்றனா்.

டி20 கிரிக்கெட்டில் இந்தியா - வங்கதேசம் இதுவரை 24 ஆட்டங்களில் மோதியிருக்க, இந்தியா 21 வெற்றிகளும், வங்கதேசம் 3 வெற்றிகளும் கண்டுள்ளன.

நேரம்: இரவு 8 மணி

இடம்: துபை

நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ், சோனி லிவ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.