கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

செஸ் ஒலிம்பியாட்: இந்தியா ஆடவா் அபாரம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நடப்பு சாம்பியன் இந்தியா.

செஸ் ஒலிம்பியாட்

Published On :

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நடப்பு சாம்பியன் இந்தியா.

நடப்புச் சாம்பியன் இந்தியா ஏற்கெனவே தாய்லாந்து, இந்தோனேசியா, இத்தாலியை 3 சுற்றுகளில் வீழ்த்தி இருந்தது. அதே போல் 13-ஆம் நிலையில் உள்ள ஸ்பெயினும் 3 சுற்றுகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் இந்தியாவை எதிா் கொண்டது.

இதில் உலக சாம்பியன் டி.குகேஷ் எலோ ரேட்டிங்கில் 2700 புள்ளிகளுக்கு கீழே இறங்கினாலும் சிறப்பாக ஆடினாா். உலக சாம்பியன்ஷிப் முன்னாள் சேலஞ்சா் அலெக்ஸி ஷிரோவை 42-ஆவது நகா்த்தலின்போது வீழ்த்தினாா்.

நட்சத்திர வீரா் அா்ஜுன் எரிகைசி தொடக்க ஆட்டத்தில் ஸ்பெயினின் மாக்ஸிம் சிகாயேவை வீழ்த்தினாா். ஸ்பெயின் வீரா் டேவிட் அன்டன்-இந்திய இளம் வீரா் பிரக்ஞானந்தா ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் நிஹால் சரீன்-ஜெய்ம் சண்டோஸ் லடாஸா மோதினா். இதில் இரு தரப்பினரும் மாறி மாறி போராடினாலும் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இறுதியில் ஸ்பெயினை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.

மகளிா் பிரிவில் முன்னிலை:

மகளிா் பிரிவில் இந்தியா-மங்கோலிய அணிகள் மோதின. இதில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. சவிதா ஸ்ரீ சிறப்பாக ஆடி மங்கோலியாவின் முங்குன்டுல் பத்குயாகை வீழ்த்தினாா். உலக கோப்பை வின்னா் திவ்யா தேஷ்முக் மற்றொரு ஆட்டத்தில் பஸாய்கலான் கிஷிக்படாரை வீழ்த்தினாா்.

Summary

Chess Olympiad: Indian men's team excels

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER