ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டி 20 உலகக் கோப்பை: முதல் போட்டியில் ஓமன் - பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை

இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகளுக்கிடையே நடைபெறவுள்ள தகுதிச் சுற்று போட்டியிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

News image
கோப்புப்படம்
Updated On :17 அக்டோபர் 2021, 10:49 am

DIN

கரோனா காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐசிசி டி 20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், அக்டோபர் 17 ஆம் தேதியான இன்று தொடங்கும் டி20 உலகக் கோப்பையில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஓமன் - பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றுவருகிறது.

இந்திய நேரப்படி 3:30 மணிக்கு ஓமனில் உள்ள அல் அமராத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஏழு ஓவர்களின் முடிவில், 47 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழுந்து பப்புவா நியூ கினியா அணி ஆடிவருகிறது.

16 அணிகள் பங்கேற்கும் டி - 20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மேலும், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகளுக்கிடையே நடைபெறவுள்ள தகுதிச் சுற்று போட்டியிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் ஏ பிரிவில் இலங்கை, நமிபியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும், பி பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

சூப்பர் 12 சுற்றில், இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு நுழையும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் 24ம்தேதி துபாயில் எதிர்கொள்கிறது. அதற்கு முன் 2 பயிற்சி ஆட்டங்களில் இந்தியா ஆடுகிறது. நாளை இங்கிலாந்துடனும், 20ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.