நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான்; வீரர்களின் ஊதியம் குறைக்கப்படுகிறதா?

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியதால் பாகிஸ்தான் அணி வீரர்களின் ஊதியம் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

படம் |AP

Updated On :15 ஜூன் 2024, 3:51 pm IST

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியதால் பாகிஸ்தான் அணி வீரர்களின் ஊதியம் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, முதல் அணியாக அந்தப் பிரிவிலிருந்து சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான நேற்றையப் போட்டி மழையினால் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டதால், அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியதால் பாகிஸ்தான் அணி வீரர்களின் ஊதியம் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story image

படம் | AP

இது தொடர்பாக பாகிஸ்தான் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் அணி வீரர்களின் மத்திய ஒப்பந்தம் மதிப்பீடு செய்யப்படலாம். டி20 உலகக் கோப்பையில் மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணியின் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கடும் அதிருப்தியில் இருக்கும்பட்சத்தில், வீரர்களின் ஊதியத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. இன்னும் எந்த ஒரு முடிவும் உறுதியாக முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தியில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.