நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

1 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்த நேபாளம்! வைரல் விடியோ!

டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 1 ரன் வித்தியாசத்தில் நேபாள அணி தோற்றது.

News image

படம்: எக்ஸ்/ ஐசிசி

Updated On :15 ஜூன் 2024, 11:19 am IST

டி20 உலகக் கோப்பை போட்டியின் 31ஆவது ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நேபாளம் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 115/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீஜா ஹெண்ட்ரிக்ஸ் 43 ரன்கள், ஸ்டப்ஸ் 27 ரன்கள் எடுத்தார்.

நேபாளம் சார்பில் குஷால் புர்டேல் 4 விக்கெட்டுகளும் திபேந்திர சிங் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய நேபாளம் அணியின் தொடக்க வீரர் ஆசிஃப் ஷெயிக் 42 ரன்கள் எடுத்தார். அனில் ஷா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை:

முதல் 2 பந்துகளில் ரன் ஏதும் இல்லை. 3ஆவது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. 4ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 5ஆவது பந்து ரன் இல்லை. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவையாக இருக்கும்போது ரன் அவுட் ஆகி தென்னாப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story image

நேபாளம் இந்த்ப் போட்டியில் வென்றிருந்தால் சூப்பர் 8 வாய்ப்பு இருந்திருக்கும். தற்போது உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறுகிறது. மீதமிருக்கும் ஒரு போட்டியில் வென்றாலும் பலனில்லை. ஆனால் தெ.ஆ. போன்ற வலுவான அணியிடன் போராடி தோற்றது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தெ,ஆ. வீரர் ஷம்ஸி 4 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.