டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

7-வது ஓவரிலிருந்து 15-வது ஓவர் வரை பேட்டிங் செய்வதை விரும்புகிறேன்: சூர்யகுமார் யாதவ்

7-வது ஓவரிலிருந்து 15-வது ஓவர் வரை பேட்டிங் செய்வதை விரும்புவதாக இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

News image

படம் | AP

Updated On :21 ஜூன் 2024, 8:07 pm IST

7-வது ஓவரிலிருந்து 15-வது ஓவர் வரை பேட்டிங் செய்வதை விரும்புவதாக இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 7-வது ஓவரிலிருந்து 15-வது ஓவர் வரை பேட்டிங் செய்வதை விரும்புவதாக இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டிக்கான இடைவெளியின்போது சூர்யகுமார் யாதவ் பேசியதாவது: 7-வது ஓவரிலிருந்து 15-வது ஓவர் வரை பேட்டிங் செய்வதை நான் விரும்புகிறேன். ஏனெனில், அந்த ஓவர்களுக்கு இடையே ரன்கள் குவிப்பது மிகவும் கடினம். அதனால், அந்த ஓவர்களுக்கு இடையே சிறப்பாக விளையாடுவதற்கு பயிற்சி செய்துள்ளேன். ரோஹித் சர்மாவுடன் இணைந்தும், அவரது தலைமையின் கீழும் நிறையப் போட்டிகளில் விளையாடியுள்ளேன். எனது ஆட்டத்தை அவர் புரிந்துகொள்வார். அதனால், என்னுடைய ஆட்டத்தை அவர் மகிழ்ச்சியாக ரசிப்பார் என்றார்.

இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் அதன் அடுத்தப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.