மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அரையிறுதிக்கு தகுதி பெற்ற பிறகு ரஷித் கான் பேசியது என்ன?

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் பேசியுள்ளார்.

News image
ரஷித் கான்- படம் | AP
Updated On :25 ஜூன் 2024, 10:42 am

DIN

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 114 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய வங்கதேசம் ரஷித் கான் மற்றும் நவீன் உல் ஹக்கின் அபார பந்துவீச்சில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது ஆப்கானிஸ்தான் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது மிகப் பெரிய விஷயம். முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது ஆப்கானிஸ்தான் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளோம். ஆனால், தற்போது முதல் முறையாக இந்த நிலையை அடைந்துள்ளோம். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில்தான் முதல் முறையாக சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றோம்.

உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் நாங்கள் விளையாடிய விதம், கண்டிப்பாக இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் என்பதைக் காட்டுவதாக நினைக்கிறேன். ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் அணியின் வெற்றிக்காக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். என்னுடைய உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. இது மிகப் பெரிய சாதனை. என்னைப் பொறுத்தவரை, எந்த ஒரு அணியும் இது நல்ல அணி, இது மோசமான அணி என்பதெல்லாம் கிடையாது. அனைத்து அணிகளும் சமமானதே என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.