தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

தமிழகம் முழுவதும் கூட்டுறவு மருந்துக் கடைகள்: கோ.சி. மணி

தமிழகம் முழுவதும் கூட்டுறவு மருந்துக் கடைகள் திறக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்தார். திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு...

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:27 pm IST

சென்னை, ஆக. 2: தமிழகம் முழுவதும் கூட்டுறவு மருந்துக் கடைகள் திறக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்தார்.

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சார்பில் காமதேனு கூட்டுறவு மருந்துக் கடைகள் சென்னையில் ஆறு இடங்களில் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. சென்னை பெசன்ட் நகரில் ஒரு கூட்டுறவு மருந்தகத்தை திறந்து வைத்து கோ.சி. மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 50 மருந்து கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி, சென்னையில் 6 கூட்டுறவு மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

 சென்னை ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், ராயப்பேட்டை, அசோக்நகர், ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் இந்த மருந்தகங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட தொடங்குகின்றன.

÷இதே போல் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கம் சார்பில் தாம்பரம், பம்மல், போரூர், செம்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய இடங்களிலும், பூங்காநகர் கூட்டுறவு பண்டக சாலை சார்பில் அண்ணா நகர், திருமங்கலம், பாடி ஆகிய இடங்களிலும் இந்த கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

÷இந்த கூட்டுறவு மருந்தகங்களில் சித்தா, யுனானி, ஆங்கில மருந்துகள் உள்பட அனைத்து விதமான மருந்துகளும் கிடைக்கும்.

÷இந்த மருந்துக் கடைகளில் அனைத்து விதமான மருந்துகளும் தரமாகவும், ஏழை மக்களின் வசதிக்காக குறைவான விலையிலும் கிடைக்கும். மேலும் இதில், தேனாம்பேட்டை மருந்துக் கடை 24 மணி நேரமும் செயல்பட இருக்கிறது. மற்ற கடைகள் காலை 9  மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.

÷இந்த மருந்துக் கடைகளுக்கு மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து, கூட்டுறவு மருந்தகங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்படும் என்றார் அவர்.

÷கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலர் ஸ்வரன் சிங், இந்திய முறை மருத்துவர்களின் கூட்டுறவு மருந்தக (இம்ப்காப்ஸ்) தலைவர் டாக்டர் ஏ.ராமலிங்கம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.